Admission office will be open on all the Days including Sundays and Holidays
Banner Image

SACAS Events

Get all important updates, notices, and announcements in one place. Stay informed about events, academic schedules, deadlines, and other essential information to ensure you never miss out.

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் புத்தகக் கண்காட்சி 30.01.2025 to 31.01.2025

February 2, 2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை  மற்றும் தமிழ்த்துறை இணைந்து புத்தகக் கண்காட்சியை ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தின. புத்தகக் கண்காட்சியின்  முதல் நாளான ஜனவரி 30, 2025 அன்று நடைபெற்ற தொடக்க விழாவில்  இயக்குநர் சாய் சத்யவதி, முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார், மேலாண்மைப் பள்ளி இயக்குநர் முனைவர் ஆர். விஜி ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் முனைவர் பி.கே. மாதவன் ‘புத்தகங்களில் பிறந்தவன்’என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தொழில்முறைக்  கணக்காளர் திரு. ஆவிச்சி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  அவர் ‘நூலகம்: உலகை வெல்வதற்கு விதைகளை விதைப்பதற்கான இடம்’  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி, நூலகங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

புத்தகக் கண்காட்சியின் இரண்டாம் நாளான ஜனவரி 31,  2025 அன்று  தொலைக்காட்சி புகழ் மற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளர் திருமதி ரம்யா அசோக் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் தி இந்து  பப்ளிகேஷன், கோரல் பப்ளிஷர்ஸ், சிஎஸ்பி புக்ஸ், விஜய் நிக்கோல் இம்ப்ரிண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், விஆர்1 பப்ளிஷர், கல்யாணி பப்ளிஷர் மற்றும் ஹிந்துஸ்தான் புக்ஸ் போன்ற புகழ்பெற்ற பதிப்பகங்களின் புத்தகக் கடைகள் இடம்பெற்றன. புத்தகக் கண்காட்சியைப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் பேராசிரியப் பெருமக்களும் ஆர்வத்துடன் புத்தகக் கடைகளைப் பார்வையிட்டுப் புத்தகங்கள் வாங்கி மகிழ்ந்தனர். இந்நிகழ்வு புத்தக ஆய்வுக்கான சிறந்த தளத்தை வழங்கியதோடு மட்டுமல்லாமல், கல்வி மற்றும் அறிவுசார் வளர்ச்சியில் நூலகங்களின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தியது.

 

Registrations open